பொறியியல் டிப்ளமா தேர்வு : மாணவர்களின் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள கடைசி வாய்ப்பு : தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவிப்பு !

பொறியியல் டிப்ளமா தேர்வு :
மாணவர்களின் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள கடைசி வாய்ப்பு :
தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவிப்பு !

பொறி​யியல் டிப்​ளமா தேர்​வில் தேர்ச்சி பெற்ற மாணவர்​களின் சான்​றிதழ்​களை இது​வரை பெறாத பாலிடெக்​னிக் கல்​லூரி​கள் இன்று முதல் செப்.3 வரை பெற்​றுக்​கொள்​ளலாம் என தொழில்​நுட்​பக் கல்​வித்துறை அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்​றும் சுயநிதி பாலிடெக்​னிக் கல்​லூரி​களின் முதல்​வர்​களுக்கு தொழில்​நுட்​பக் கல்வி இயக்கக உதவி இயக்​குநர் (தேர்​வு​கள்) அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை:
கடந்த ஏப்​ரல் மாதம் நடை​பெற்ற டிப்​ளமா தேர்​வு​களை (ஆர்​.2023 திட்​டம்) எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்​களின் தற்​காலிக சான்​றிதழ் மற்​றும் ஒருங்​கிணைந்த மதிப்​பெண் பட்​டியலை ஆக.3 முதல் 7-ம் தேதி வரை பெற்​றுக்​கொள்​ளு​மாறு அனைத்து பாலிடெக்​னிக் கல்​லூரி​களும் அறி​வுறுத்​தப்​பட்​டன. ஆனாலும், பல கல்​லூரி​கள் இது​வரை இவற்றைப் பெற​வில்​லை.

மாணவர்​களின் டிப்​ளமா சான்​றிதழ்​களும் தற்​போது தயார் நிலை​யில் இருப்​ப​தால் அவர்​களுக்கு விரை​வாக வழங்​கும் பொருட்டு கல்​லூரி​யின் பிர​தி​நி​தியை உரிய அனு​மதி கடிதத்​துடன் அனுப்​பி, ஆக.31 (இன்று) முதல் செப்.3 வரை தற்​காலிக சான்​றிதழ், ஒருங்​கிணைந்த மதிப்​பெண் பட்​டியல் மற்​றும் டிப்​ளமா சான்​றிதழ்​களை தொழில்​நுட்​பக் கல்வி இயக்கக கணினி பிரி​வில் பெற்​றுக்​ கொள்​ளலாம்.

இவ்​வாறு அதில்​ கூறப்​பட்டுள்​ளது