நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “விதை விழா” !

நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “விதை விழா” !

நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), இயற்கை மன்றம் (Nature Club) சார்பில் “விதை விழா (Vidhai Vizha)” நிகழ்ச்சி 30.07.2026 (வியாழக்கிழமை) மதியம் 12.20 மணிக்கு கல்லூரி வளாக நெல் வயலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் நோக்கம் இயற்கை வேளாண்மை, பாரம்பரிய நெல் சாகுபடி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்துவதாகும். இதில் கல்லூரி நிர்வாக இயக்குனர் மற்றும் செயலாளர், முனைவர். இராஷித் கஷாலி,முதல்வர், முனைவர்.பால ஷண்முகதேவி , பேராசிரியர்கள், இயற்கை மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு நெல் விதை விதைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சி மூலம் மாணவர்களிடையே இயற்கை வளங்களை பாதுகாக்கும் பொறுப்புணர்வு, விவசாயத்தின் முக்கியத்துவம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், இந்நிகழ்ச்சியில் அனைத்து மாணவர்களும் உற்சாகத்துடன் பங்கேற்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வேளாண்மைக்கு தங்களது பங்களிப்பை வழங்கினர்.