தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி),கல்லூரியில்,
கிறிஸ்துமஸ் விழா சனிக்கிழமை 20.12. 2025 காலை கல்லூரி அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி ஜெஸி பெர்ணான்டோ தலைமையில் நடைபெற்ற இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக
அலங்காரத்தட்டு பங்குத் தந்தை அருட்தந்தை டாக்டர். மரியஜான் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி வழங்கினார் .

தொடர்ந்து கல்லூரி மாணவிகள் பாடல்கள் பாடினார்கள், நடனம் ஆடினார்கள். இயேசு பாலன் குடில்கள் போன்று தத்ரூபமாக கல்லூரி மாணவிகள் அமைத்து செய்து இருந்தார்கள்.
தொடர்ந்து துறை வாரியாக குடில் போட்டி மற்றும் கிறிஸ்துமஸ் பாடல் குழுவாக நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஏழை மக்களுக்கு புத்தாடைகள் வழங்கினார்கள். இந் நிகழ்வில் கல்லூரி செயலர் அருட்சகோதரி குழந்தை திரேஸ், துணை முதல்வர் அருட்சகோதரி எழிலரசி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.












