நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் கல்லூரிகளுக்கிடையிலான பளு தூக்கும் போட்டி :
தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரிக்கு பதக்கங்கள்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக கல்லூரிகளுக்கிடையிலான பளு தூக்குதல் போட்டியில் தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி, முதலாமாண்டு
முதுகலை நிலத்தியல் துறை மாணவர்கள் முகமது ஹீரா 94 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கமும், விஜய பேச்சிமுத்து 88 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு பாராட்டினார்.













