தூத்துக்குடியில் ஏ. பி. சி. மகளிர் கல்லூரி மற்றும் என். எல். சி. மற்றும் அர்விந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்

தூத்துக்குடியில் ஏ. பி. சி. மகளிர் கல்லூரி மற்றும் என். எல். சி. மற்றும் அர்விந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்

என். எல். சி. தூத்துக்குடி, தமிழ்நாடு பவர் லிமிடெட், அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் ஏ. பி. சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்ஏ. பி. சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இம்முகாமிற்கு என். எல். சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் அனந்தராமானுஜம் தலைமைச் செயல் அதிகாரி தலைமை வகித்தார். ஏ. பி. சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர். சுப்புலட்சுமி, சரவணன், கூடுதல் முதன்மை மேலாளர், மனித வளத்துறை மற்றும் ரகுபதி, துணை முதன்மை மேலாளர், என். எல். சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இம்முகாமில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ள எழுத்து உள்ளிட்ட பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து 214 கண்ணாடிகள் மற்றும் 53 பேர்க்கு மருந்துகள் கண் மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில் என். எல். சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் சார்பாக இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் கண்புரை சிகிச்சை பெற வருபவர்களுக்கு என். எல். சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் சார்பில் இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

இவை மட்டுமன்றி உள்விழி லென்ஸ் அறுவை சிகிச்சை, தங்கும் வசதி, உணவு போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்பட்டன.

இம்முகாமில் நாட்டு நலப் நலப்பணித்திட்டம் (அணி எண்கள் 47&57 ) மாணவிகள் 54 பேர், ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர்.ஸ்டெல்லா பாக்கியம், முனைவர். புஷ்பகவல்லி,
அரவிந்த் கண் மருத்துவமனை கந்தசாமி ஆகியோர் கலந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

ஏறத்தாழ 474 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.