தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் விலங்கியல் துறை சார்பில் மேம்பட்ட மருத்துவ குறியீட்டியல் சான்றிதழ் வகுப்பு
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் விலங்கியல் முதுநிலை மற்றும் ஆராய்ச்சித்துறை, திருநெல்வேலியைச் சேர்ந்த கொரைசன் கோடிங் சொலுஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, மேம்பட்ட மருத்துவ குறியீட்டியல் (Advanced Medical Coding) குறித்த 60 மணி நேர சான்றிதழ் பாட வகுப்பை நடத்தியது.
இவ்வகுப்பின் நிறைவு விழா இன்று (13.04.2026) நடைபெற்றது.
விலங்கியல், தாவரவியல் மற்றும் வேதியியல் துறைகளில் இருந்து மொத்தம் 31 மாணவர்கள் இப்பயிற்சியை முடித்தனர் .
அவர்களுக்கு கல்லூரி முதல்வர் டாக்டர். வீரபாகு சான்றிதழ்களை வழங்கினார்.
கொரைசன்கோடிங் சொலுஷன்ஸ் நிறுவனத்தின் பயிற்சி மற்றும் வணிக மேம்பாட்டு தலைவர் ஹன்னா பொன்னரசி, பயிற்சியாளராக செயல்பட்டு, தமது ஊக்கமளிக்கும் மற்றும் தொடர்பாடல் நிறைந்த அமர்வுகள் மூலம் மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்.
இந்த நிகழ்ச்சி, விலங்கியல் துறைத் தலைவர் டாக்டர்.ராதிகா வழிகாட்டுதலில் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், இணை ஒருங்கிணைப்பாளர்களான டாக்டர். பெனாசிர் பேகம் மற்றும் டாக்டர். பிரியா ஆகியோர் இப்பயிற்சி வகுப்பினை ஒருங்கிணைத்தனர்.












