தூத்துக்குடி வடக்கு பத்திரகாளி அம்மன் கோவில் தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 79 வது சசுதந்திர தின விழா
தூத்துக்குடி வடக்கு பத்திரகாளி அம்மன் கோவில் தெரு , மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று 79வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பள்ளித் தலைமையாசிரியர் அனைவரையும் வரவேற்று பேசினார். பகுதியின் கவுன்சிலர் மரிய கீதா தலைமையேற்று தேசிய கொடியை ஏற்றினார்.
R. R. Shipping சஞ்சய் , பள்ளியின் தற்காப்பு கலை பயிற்றுநர் ஜாபர் உசேன் மற்றும் SMC உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுதந்திர தினம் மற்றும் தியாகிகள் பற்றி கூறப்பட்டது. மாணவர்களின் கடமைகள் பற்றி ஆசிரியர்கள் எடுத்துக் கூறினர். மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. சுதந்திர தின விழா பற்றி பேச்சு போட்டி, கட்டுரை போட்டி மாறுவேடம், கவிதை கூறுதல், பாடல் ஆகியவை மாணவர்கள் பங்கு பெற்றனர்.

மாணவர்கள் சிலம்பம் சுற்றி காட்டினர். பறை வாத்தியம் இசைத்தனர் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது மேலும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியை ஜெரோலின் நன்றி கூறினார்.

நாட்டு பண்ணுடன் இன்றைய விழா இனிதே முடிவுற்றது. விழா ஏற்பாடுகளை அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.













