தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் சர்வதேச யோகா தினம்

தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் சர்வதேச யோகா தினம்

தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியின் தாளாளரும், முதல்வருமான ஜெயா சண்முகம் தலைமையில் நடைப்பெற்ற யோகா தினத்தில் சிறப்பு விருந்தினர்களாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்த யோகா பயிற்சியாளர்கள் சரத்குமரன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு யோகாவின் சிறப்பு பலன்களையும், நம்முடைய உணவுமுறை பற்றியும் எடுத்துக் கூறினார்கள்.

அதன்பின் மாணவ, மாணவியர்களுக்கு சூரிய நமஸ்காரம் தொடங்கி பத்மாசனம், யோகமுத்ரா, பஸ்திமோத்தாசனம், திருகோணசனம், வச்சிராசனம் போன்ற பலவகை ஆசனங்களை செயல் விளக்கம் செய்து காட்டி அதன பின்னர் மாணவ, மாணவியர்களை செய்ய வைத்து ஆர்வமூட்டினார்கள்.

பள்ளியின் முதல்வர் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

நிறைவாக ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் துணைமுதல்வர் பிரியங்கா நன்றி தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் செய்திருந்தனர்.