கோச்சிங் சென்டர்களை தடை செய்ய மாநில கல்விக் கொள்கை வரையறைக் குழு பரிந்துரை :

கோச்சிங் சென்டர்களை தடை செய்ய
மாநில கல்விக் கொள்கை வரையறைக் குழு பரிந்துரை :

பள்ளிகள் மற்றும் பள்ளிகளால் நடத்தப்படும் பயிற்சி மையங்களை தடை செய்யவோ அல்லது வரைமுறைப்படுத்தவோ குழு அமைக்கப்பட வேண்டும் என்று மாநிலம் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மாநில கல்விக் கொள்கை வரையறைக் குழு இன்று தமிழக அரசிடம் அளித்த அறிவுறுத்தலில் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நடைபெறும் நுழைவுத்தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்துவதற்காக மட்டுமே பயிற்சி மையங்கள் செயல்படுவதாகவும் அந்தக் குழு தெரிவித்துள்ளது .

தில்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு இன்று சமர்ப்பித்த அறிவிப்பில், பள்ளிகளில் நடத்தப்படும் அல்லது பள்ளியே நடத்தும் பயிற்சி மையங்களை தடை செய்ய வேண்டும் என்றும், பள்ளிகளில் இவ்வாறு நடத்தப்படும் பயிற்சி மையங்கள், பாடத்திட்டத்தை முழுமையாக நடத்த வேண்டும்.

பாடங்களை முடிக்காமலேயே, அல்லது பாடங்களை நடத்தாமலேயே, மாணவர்களை நுழைவுத் தேர்வுக்கு மட்டும் தயார் செய்வதாக் கல்விக் கொள்கைக் குழு வரையறை தெரிவித்தார்.