- தமிழ்நாடு பொறியியல் கல்லூரி சேர்க்கை 2025 (TNEA 2025)
விண்ணப்பிக்கும் முறை
தமிழ்நாட்டில் மாநில பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகங்கள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் ஆகியவற்றில் உள்ள பல்வேறு பொறியியல் படிப்புகளுக்கான இடங்கள் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) மூலம் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், 2025-26 கல்வி ஆண்டிற்கும் பொறியியல் கலந்தாய்வு இணைய வழியில் https://www.tneaonline.org/ என்ற இணையதளம் வழியாக நடைபெற உள்ளது.
மே 7 முதல் விண்ணப்பிக்கும் காலம் தொடங்கியது.
பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக(மே 7 முதல் ) விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து, சரியான தரவுகளுடன் மாணவர்கள் வரும் ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு கட்டணம்
பொறியியல் படிப்புகளுக்கு கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க ஒசி, பிசி, பிசிஎம், எம்பிசி பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ மற்றும் எஸ்டி பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
மாணவர்கள் முதல் பொறியியல் கலந்தாய்விற்கு பதிவு செய்ய வேண்டும். அதனைத்தொடர்ந்து, ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்/ தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
டிசி (Transfer Certificate)
6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த பள்ளியின் விவரங்கள்
வகுப்பு பிரிவு சான்றிதழ் (இணைய வழியில் பெறப்பட்ட சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம்)
நேட்டிவிட்டி சான்றிதழ் (தமிழ்நாட்டில் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு அவசியமில்லை)
வருமான சான்றிதழ்
முதல் தலைமுறை சான்றிதழ் (தேவை
இருப்பின்)
சிறப்பு சலுகை சான்றிதழ்கள்
முக்கிய நாட்கள்
விவரம் தேதிகள்
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் 07.05.2025
விண்ணப்பிக்க கடைசி நாள் 06.06.2025
ஆவணங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் 09.06.2025
மாணவர்களுக்கு தனித்துவ எண் ஒதுக்கீடு 11.06.2025
ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்பு 10.06.2025 முதல் 20.06.2025
தரவரிசை பட்டியல் வெளியீடு 27.06.2025
குறை தீர்க்கும் சேவை 28.06.2025 முதல் 02.07.2025
கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
கலந்தாய்வின் மூலம் சேர்க்கை
மாணவர்களின் 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பித்தவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அதனைத்தொடர்ந்து, கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்படும். கட்-ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வின் மூலம் மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளில் படிப்புகளை தேர்வு செய்யலாம். ஆன்லைன் வழியான கலந்தாய்வின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் படிப்புக்கான இடங்கள் நிரப்பப்படும்.
கட்-ஆஃப் மதிப்பெண்கள்
மாணவர்கள் தாங்கள் விரும்பும் பொறியியல் படிப்புகளின் சேர, கல்லூரிகளை தேர்வு செய்ய உதவும் வகையில் கடந்த 5 ஆண்டுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் ஏற்கனவே இணையதளத்தில் வெளியிடப்பட்டது. B.E,Vocational மற்றும் B.Arch ஆகிய படிப்புகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் – கல்லூரி மற்றும் துறை வாரியாக வெளியிடப்பட்டது. இந்த தரவுகள் மூலம் என்னென்ன கட்-ஆஃப் மதிப்பெண்களுக்கு என்னென்ன படிப்புகள், எந்தெந்த கல்லூரிகளில் வழங்கப்படுகிறது என்பதை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். கலந்தாய்வின் மூலம் கல்லூரியை தேர்வு செய்யவதற்கான சாய்ஸ் பில்லிங்கிற்கு இந்த தகவல் மிக உதவியாக இருக்கும்.
அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளின் பொதுப் பிரிவு, பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்சிஏ மற்றும் எஸ்டி வாரியாக கட்-ஆஃப் மதிப்பெண்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 08.05.2025 தேதி காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து, மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் ஜூலை இரண்டாம் வாரம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, ஜூலை இறுதிக்குள் கலந்தாய்வு தொடங்கி, செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.












