தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில், இயற்பியல் துறைசார்பில் வன்பொருள் தொடர்பான பயிற்சிப்பட்டறை
தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி, இயற்பியல் துறை மற்றும் வியென்ஸ்டெர்ஆப்டிக், தூத்துக்குடி இணைந்து, “சிஸ்டம் டாக்டர்: வன்பொருள் பழுது நீக்கம், பராமரிப்பு மற்றும் வலையமைப்பு” என்ற தலைப்பில் இருநாள் பயிற்சிப்பட்டறை 25 மற்றும் 26 செப்டம்பர் 2025 அன்று நடத்தப்பட்டது.

இந்த பயிற்சிப்பட்டறையின் நோக்கம் மாணவிகளுக்குக் கணினி ஹார்ட்வேர் சேவை, கணினி பராமரிப்பு மற்றும் நெட்வொர்க் தொடர்பான நடைமுறை அறிவை வழங்குவதாகும். நிகழ்ச்சி இயற்பியல் துறைத் தலைவர் முனைவர். ரத்னா வரவேற்புரையுடன் துவங்கியது. பின்னர், வியென்ஸ்டெர்ஆப்டிக், தூத்துக்குடி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர். மணிவண்ணன் பயிற்சிப்பட்டறையைத் தொடங்கி வைத்து, இன்றைய டிஜிட்டல் காலத்தில் தொழில்நுட்ப திறன்களின் முக்கியத்துவத்தை விளக்கும் தொடக்க உரையை வழங்கினார்.

முக்கிய விருந்தினர்களாக செல்வின் மற்றும் ராபின் அவர்கள் கலந்து கொண்டனர்.
துவக்க விழாவிற்குப் பின் மாணவிகளுக்கான பயிற்சி அமர்வுகள் தொடங்கின.இரு நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சியில், மாணவிகள் ஹார்ட்வேர் பழுது நீக்கம், பராமரிப்பு மற்றும் நெட்வொர்க்கிங் குறித்த நேரடி கற்றலைப் பெற்றனர்.

இந்நிகழ்ச்சியின் கலந்துரையாடல் மாணவிகளுக்குச் சிறந்த தொழில்நுட்ப அனுபவத்தையும் செயல்முறை அறிவையும் வழங்கின. மொத்தம் 118 மாணவிகள் இதில் பங்கேற்று பயன் பெற்றனர். இந்தப் பயிற்சி, மாணவிகளின் தொழில்நுட்ப அறிவையும், சிக்கல் தீர்க்கும் திறனையும் மேம்படுத்துவதோடு, கணினி அமைப்புகளை நம்பிக்கையுடன் கையாளும் திறனை அதிகரித்தது.நிகழ்ச்சியின் இறுதியில் மாணவிகள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், பெற்ற செயல்முறை அறிவுக்கு நன்றியையும் தெரிவித்தனர்.

பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர்.மோனிகா ராம்ராஜ் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த பயிற்சிப்பட்டறையை முனைவர் ரத்னா ஏனைய இயற்பியல் துறை பேராசிரியர்கள் சுதா, முனைவர்.அன்ஷியா, சரஸ்வதி ஆகியோருடன் இணைந்து நிகழ்ச்சியை வெற்றிகரமாக ஒருங்கிணைத்தார்.
நிறைவாக செல்வி அக்ஷயா நன்றி நவில நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுப்பெற்றது.












