பிப்ரவரி 2025 ல் நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தேர்வில், தூத்துக்குடி,
டி. ஆர். தெரு, சி. எம். உயர்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் முத்துக்குமார் 118 மதிப்பெண்களும், பிரகாஷ் ராஜ் 103 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
தேர்வில் தேர்ச்சி பெற்ற இரண்டு மாணவர்களையும் பள்ளி நிர்வாகி மற்றும் தாளாளர் எமர்சன் உதய்சிங் பாராட்டி பரிசு வழங்கினார்.
மேலும் தேர்வுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள் அனைவரையும் பள்ளி நிர்வாகி மற்றும் தாளாளர் பாராட்டினார்.












