5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளுக்கு 18-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளுக்கு18-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளர் கவுரி ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2026-27-ம் ஆண்டு கல்வியாண்டுக்கான தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப் பள்ளியிலும், பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் தனியார் சட்டக் கல்லூரிகளிலும் (அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டும்) உள்ள 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளுக்கு வருகிற 18-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் ஜூன் 5 ம் தேதி வரை www.tndalu.ac.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் 3 ஆண்டு சட்டப்படிப்பு மற்றும் முதுகலை சட்ட மேற்படிப்புகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் தேதிகள் பல்கலைக்கழக இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.