தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி என். சி. சி மாணவர்கள் சார்பில் முத்து நகர் கடற்கரையை தூய்மைபடுத்தும் பணி நடைபெற்றது

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி என். சி. சி மாணவர்கள் சார்பில் முத்து நகர் கடற்கரையை தூய்மைபடுத்தும் பணி நடைபெற்றது

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் சார்பாக மொத்தம் 45 என்.சி.சி – கடற்படை பிரிவு மாணவர்கள், 20.09.2025 அன்று காலை 8.00 மணிக்கு, தூத்துக்குடி, முத்துநகர் கடற்கரையை தூய்மைபடுத்தும் ‘புனித் சாகர் அபியான்’ (கடற்கரை சுத்தம்) நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி தூத்துக்குடி 3-டிஎன் கடற்படை யூனிட் என்.சி.சியின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாணவர்களை பங்கேற்க ஏற்பாடு செய்த கல்லூரி என்.சி.சி – கடற்படை பிரிவு அதிகாரி லெப்டினன்ட் டாக்டர். .நிஷாந்த் – திற்கு கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு நன்றி தெரிவித்தார்.