அண்ணா பல்கலை.யில் பொறியியல் வகுப்புகள் ஆகஸ்ட் 11-ல் தொடக்கம்

அண்ணா பல்கலை.யில் பொறியியல் வகுப்புகள் ஆகஸ்ட் 11-ல் தொடக்கம்

பொறி​யியல் மாணவர்​களுக்​கான முதலாம் ஆண்டு வகுப்​பு​கள் ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் தொடங்​கும் என்று அண்ணா பல்​கலைக் கழகம் தெரி​வித்​துள்​ளது.

தமிழகத்​தில் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின்​கீழ் இயங்​கும் 417 பொறி​யியல் கல்​லூரி​களில் இளநிலைப் படிப்​பு​களுக்கு 3-ம்​ சுற்று கலந்​தாய்வு ஆகஸ்ட் 7 முதல் 20-ம் தேதி வரை நடத்​தப்பட உள்​ளது. அத்​துடன் பொறி​யியல் சேர்க்கை கலந்​தாய்வு முடிவடைகிறது.

இந்​நிலை​யில் பல்​கலை.​யின் 4 வளாக கல்​லூரி​களில் முதலா​மாண்டு வகுப்​பு​கள் ஆகஸ்ட் 11-ல் தொடங்கி டிசம்​பர் 10-ம் தேதி வரை நடத்​தப்​படும். அதற்​கு​முன் மாணவர்​களுக்​கான அறி​முக வகுப்​பு​கள் ஆகஸ்ட் 5 முதல் 9-ம் தேதி வரை நடை​பெறும்.

இதே​போல், பல்​கலை. இணைப்பு அங்​கீ​காரம் இதர கல்​லூரி​களில் முதலா​மாண்டு வகுப்​பு​கள் ஆகஸ்ட் 18 முதல் டிசம்​பர் 10-ம் தேதி வரை​யும், இவர்​களுக்​கான அறி​முக வகுப்​பு​கள் ஆகஸ்ட் 11 முதல் 14-ம் தேதி வரை நடத்​தப்​படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் 4 வளாக கல்லூரிகள் விபரம் :

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் நான்கு வளாக பொறியியல் கல்லூரிகள் உள்ளன.

கிண்டி பொறியியல் கல்லூரி (CEG),

மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனம் (MIT),
அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி (ACT),

மற்றும்

கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி (SAP).

கிண்டி பொறியியல் கல்லூரி (CEG):
இது அண்ணா பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகமாகும், இது கிண்டியில் அமைந்துள்ளது.

மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனம் (MIT):
இது சென்னை தரமணி பகுதியில் அமைந்துள்ளது.

அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி (ACT):
இது காரைக்குடியில் அமைந்துள்ளது.

கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி (SAP):
இது கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ளது.

இந்த நான்கு கல்லூரிகளும் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும், இவை அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகின்றன.