மாணவர்கள் சேர்க்கை குறைவு மற்றும் உள்கட்டமைப்பு வசதியின்மை காரணமாக நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல் : ஏஐசிடிஇ தகவல் !

மாணவர்கள் சேர்க்கை குறைவு மற்றும் உள்கட்டமைப்பு வசதியின்மை காரணமாக நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல் :
ஏஐசிடிஇ தகவல் !

இந்​தி​யா​வில் நடப்பு 2025-26-ம் கல்வி ஆண்​டில் மட்​டும் நாடு முழு​வதும் 58 பொறி​யியல் மற்​றும் தொழில்​நுட்​பக் கல்​லூரி​கள் மூடப்​பட்​டுள்​ள​தாக அகில இந்​திய தொழில்​நுட்​பக் கல்விக் குழு​மம் (ஏஐசிடிஇ) தெரி​வித்​துள்​ளது.

மாணவர் சேர்க்​கைக் குறைவு, உள்​கட்​டமைப்பு வசதி​யின்மை உள்​ளிட்ட பல்​வேறு காரணங்​களால் இந்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக கூறப்​பட்​டுள்​ளது.

நாடு முழு​வதும் மொத்​தம் 58 பொறி​யியல் மற்​றும் தொழில்​நுட்​பக் கல்​லூரி​களை முறை​யாக மூடு​வதற்கு நடப்பு கல்வி ஆண்​டில் அனு​மதி அளிக்​கப்​பட்​டுள்​ளது. முறை​யான மூடல் என்​பது, அனு​மதி வழங்​கப்​பட்ட அந்த குறிப்​பிட்ட கல்வி ஆண்​டில் முதலா​மாண்டு மாணவர் சேர்க்​கையை அந்​தக் கல்வி நிறு​வனங்​கள் நடத்​தக் கூடாது என்​ப​தாகும். அதே நேரத்​தில், அங்கு ஏற்​க​னவே படித்து வரும் பிற ஆண்டு மாணவர்​கள் தங்​களது படிப்​பைத் தொடர​வும், பட்​டங்​களைப் பெற​வும் எவ்​வித தடை​யும் இருக்​காது.

மூடப்​பட்ட 58 கல்வி நிறு​வனங்​களில், அதி​கபட்​ச​மாக உத்தர பிரதேசம் மற்​றும் மகா​ராஷ்டிரா மாநிலங்​களில் தலா 12 கல்​லூரி​கள் மூடப்​பட்​டுள்​ளன. இதற்கு அடுத்​த​படி​யாக மத்​திய பிரதேசத்​தில் 8 கல்​லூரி​களும், தெலங்​கானா மற்​றும் பஞ்​சாபில் தலா 4 கல்​லூரி​களும் மூடப்​பட்​டுள்​ளன.

ஆந்​திர பிரதேசம் மற்​றும் ராஜஸ்​தானில் தலா 3 கல்​லூரி​களும்; குஜ​ராத், கர்​நாட​கா, தமிழ்​நாடு ஆகிய மாநிலங்​களில் தலா 2 கல்​லூரி​களும் மூடப்​பட்​டுள்​ளன. ஹரி​யா​னா, ஒடி​சா, உத்​த​ராகண்ட் மற்​றும் மேற்கு வங்​கம் ஆகிய மாநிலங்​களில் தலா ஒரு கல்​லூரி மூடப்​பட்​டுள்​ளது.

இந்த 58 நிறு​வனங்​களில், 3 கல்​லூரி​கள் அரசு உதவி பெறும் கல்ல்லூரிகள்
ஆகும்.மீதமுள்ள அனைத்​தும் தனி​யார் சுயநிதி கல்​லூரி​கள் ஆகும்.

மேலும், இதே கால​கட்​டத்​தில் நாடு முழு​வதும் உள்ள தொழில்​நுட்​பக் கல்​லூரி​களில் வழங்​கப்​பட்டு வந்த 950-க்​கும் மேற்​பட்ட பாடப்​பிரிவு​களும் ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது.இவ்​வாறு ஏஐசிடிஇ உயர் அதி​காரி தெரி​வித்​தார்​.

கல்லூரிகள் மூடப்படக் காரணங்கள் :

மாணவர் சேர்க்கை குறைவு: பெரும்பாலான கல்லூரிகளில் முதல் ஆண்டு மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக இருந்தது.

அடிப்படை வசதிக் குறைபாடு :

கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் செயல்பாடுகள் ஏஐசிடிஇ நிர்ணயித்த தரநிலைகளின்படி இல்லை.பயிற்சியாளர்கள் பற்றாக்குறை: தேவையான தகுதியுடைய பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பற்றாக்குறை தொடர்ந்து காணப்பட்டது.

தற்போதைய மாணவர்களின் நிலை :

இந்த 58 கல்லூரிகளுக்கும் ‘முற்போக்கான மூடல்’ (Progressive Closure) முறை பின்பற்றப்பட்டுள்ளது.இதன் மூலம் புதிதாக முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறாது.ஆனால், ஏற்கனவே இக்கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் தங்கள் முழுப் பட்டப்படிப்பையும் அதே கல்லூரியில் முடிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், நாடு முழுவதும் 950-க்கும் மேற்பட்ட குறிப்பிட்ட தொழில்நுட்ப படிப்புகளும் இக்காலகட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.