12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் தூத்துக்குடி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, சாமுவேல்புரம் தொடர்ந்து 6 வது முறையாக 100 சதவீதம் தேர்ச்சி :

12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் தூத்துக்குடி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, சாமுவேல்புரம் தொடர்ந்து 6 வது முறையாக 100 சதவீதம் தேர்ச்சி :

12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் தூத்துக்குடி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி சாமுவேல்புரம் தொடர்ந்து 6-வது முறையாக 100 சதவீதம் தேர்ச்சியைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கல்வி பயிற்றுவிக்கும் இப்பள்ளி நடைபெற்ற  12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவி டேனிகா மேத்யூ 600-க்கு 569 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.மாணவி டேனிகா மேத்யூ தான் படித்த தூத்துக்குடி சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் ஆசிரியையாகப் பணியாற்றும் பிளோரிடா – வின் மகள் ஆவார். மேலும் இவரது தந்தை ஜெபசிங் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்.

மேலும் மாணவன் மாரி சரண் – 568 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாம் இடம் பிடித்துப் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

பள்ளியின் சாதனை குறித்துத் தலைமையாசிரியை ரூஃபினா ரொட்ரிகா கூறியதாவது: “கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் இப்பள்ளி தொடர்ந்து 6-வது முறையாக 100 சதவீத தேர்ச்சியைப் பெற்று வருகிறது. ஆசிரியர்களின் கடின உழைப்பும், மாணவ-மாணவியரின் முழு ஒத்துழைப்புமே இந்த வெற்றிக்குக் காரணம். பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் மாநகராட்சி மேயர், ஆணையர் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

தொடர்ந்து சாதனை படைத்து வருவது அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி ஆர்வம், திறன் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும் திறன் , சிறந்த வழிகாட்டுதலை வெளிப்படுத்துகிறது.