தமிழக அரசுப் பள்ளிகளில் 2025 – 2026 ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை 4,00,000-ஐ தாண்டியது
தமிழகத்தில் 2025 – 2026 ம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுப் பள்ளிகளில் 2025 – 2026 ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கியது. இதுவரை 4,00,364 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 76 ஆயிரம் கூடுதலாகும்.
இந்த 2025 – 2026 ம் கல்வியாண்டில்
மழலையர் வகுப்பில் 32,807 பேர்,
முதலாம் வகுப்பு தமிழ் வழியில்-2,11,563 பேர், ஆங்கில வழியில் 63,896 பேர்,
2 முதல் 8-ம் வகுப்பு வரை 92,098 பேர் சேர்ந்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை தரப்பில் கூறியதாவது:
பல்வேறு வசதிகளுடன் கூடிய உள்கட்டமைப்பு, கற்றல் செயல்பாடு, 7.5 % இட ஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்களால் அரசு பள்ளிகள் மீது பெற்றோருக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது. மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகள் மூலமும் சேர்க்கை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தொடக்கக் கல்வி துறையில் 58 கல்வி மாவட்டங்கள் உள்ளன. முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் தென்காசி கல்வி மாவட்டம் 8,571 மாணவர்கள் எண்ணிக்கையுடன் முதலிடமும்,மிக குறைந்த அளவாக நீலகிரி கல்வி மாவட்டம் 1,022 மாணவர் சேர்க்கையுடன் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.
முதலாம் வகுப்பில் அதிக மாணவர்கள் சேர்ந்துள்ள முதல் 10 கல்வி மாவட்டங்கள் விவரம்:
தென்காசி- 8,471,
திண்டுக்கல்-8,000
திருச்சி – 7,711,
கள்ளக்குறிச்சி – 7,554,
திருவண்ணாமலை- 7,386,
சிவகாசி- 6,809,
திருப்பூர்- 6,777,
திருவாரூர்- 6,592,
கோயம்புத்தூர்- 6,423,
திருப்பத்தூர்- 6,418.
குறைவான எண்ணிக்கையில் மாணவர் சேர்க்கை செய்த 10 கல்வி மாவட்டங்கள் விவரம்:
நீலகிரி- 1,022,
தேனி- 2,207,
ஒட்டன்சத்திரம்- 2,480,
தாராபுரம்- 2,594,
பொள்ளாச்சி- 2,597,
அரியலூர்- 2,625,
பெரம்பலூர்- 2,636,
வள்ளியூர்- 2,748,
கரூர் – 3,077,
சிவகங்கை- 3,223. என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது..












