ஓட்டப்பிடாரம் டி.எம்.பி. மெக்கவாய் கிராமிய ஆரம்பப் பள்ளியில் 77வது குடியரசு தின விழா
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் டி.எம்.பி மெக்கவாய் கிராமிய ஆரம்பப் பள்ளியில் 77-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் கமலக்கண்ணன் தேசிய கொடி ஏற்றினார். விழாவில் பள்ளி குழந்தைகள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.













