மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி திட்ட அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்
பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் ஆய்வுக் கூட்டம் வரும் 23.06.2025 & 24.06.2025 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழகக் கூட்ட அரங்கில் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது .
இக்கூட்டத்தில் அந்தந்த மாவட்டங்களில் பணியாற்றும் முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள் (இடைநிலை, தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளிகள்), மற்றும் உதவித் திட்ட அலுவலர் ஆகியோர்கள் கலந்துகொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டமாக அழைக்கப்பட்டு மாவட்ட நிலவரம் ஆய்வுசெய்யப்பட உள்ளது . இக்கூட்டத்தில் மாவட்ட அலுவலர்கள் கலந்துகொள்ளும் போது அந்தந்த மாவட்டத்திற்குரிய கண்காணிப்பு அலுவலர் மற்றும் அனைத்து இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பள்ளிக்கல்வி இயக்குநரும் , தொடக்கக்கல்வி இயக்குநரும் , தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.












