தமிழக பள்ளிகளில் ஆர்.டி.இ மாணவர் சேர்க்கை:
விண்ணப்ப பதிவு அக். 9-ல் தொடக்கம் ;
தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டம் (RTE) 2009-ன் கீழ், 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு அக்டோபர் 9, 2025 அன்று தொடங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டம் (RTE) 2009-ன் கீழ், 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு அக்.9 அன்று தொடங்கப்பட உள்ளது.
மத்திய அரசு நிலுவையில் வைத்திருந்த சுமார் ரூ. 700 கோடி வரையிலான ஆர்.டி.இ. இழப்பீட்டு நிதியை விடுவித்ததைத் தொடர்ந்து, தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
இதுகுறித்துத் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “2025-26 கல்வி ஆண்டிற்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் (RTE Act)கீழ் மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு அரசு அறிவிக்கிறது. மத்திய அரசு, மாநிலத்தின் நிலுவையில் உள்ள ஆர்.டி.இ இழப்பீட்டு நிதியை விடுவித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆர்.டி.இ. ஒதுக்கீட்டின் கீழ் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ள தகுதியுள்ள குழந்தைகளை முறைப்படுத்த, 10 நாட்கள் கால அவகாசத்துடன் கூடிய சிறப்பு ஆன்லைன் சேர்க்கை சாளரம் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பள்ளி முதல்வர்கள் தகுதியுள்ள மாணவர்களை அடையாளம் கண்டு, பெற்றோரின் எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெற்று, நுழைவு நிலை வகுப்புகளில் நிரப்பப்பட்ட மொத்த இடங்களின் விவரங்களை அக்டோபர் 7-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஆர்.டி.இ-ன் கீழ் சேர்க்கைக்குத் தகுதியுள்ள குழந்தைகளின் இறுதிப் பட்டியல் அக்டோபர் 14 அன்று வெளியிடப்படும்.
ஆண்டு வருமானம் ரூ. 1.5 லட்சம் அல்லது அதற்குக் குறைவாக உள்ள குடும்பங்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவை.
விண்ணப்ப செயல்முறையை மேற்பார்வையிடும் ஆரம்பக் கல்வி இயக்குநரகத்திடம், தகுதியுள்ள குடும்பங்கள் தேவையான ஆவணங்களைச் சரிபார்ப்புக்கு சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான விரிவான செயல்முறைகள், தகுதி விதிமுறைகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் அறிவிக்கையில் குறிப்பிடப்படும்.
பெற்றோர்கள் செல்லுபடியாகும் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் தனிப்பட்ட, கல்வி மற்றும் குடும்ப வருமான விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டையின் நகல் மற்றும் வருமான விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஆர்.டி.இ. ஒதுக்கீட்டின் கீழ் கிடைக்கும் விருப்பமான பள்ளிகளைத் தேர்வு செய்ய வேண்டும். விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கும் காலக்கெடுவுக்கு முன் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்












