தமிழகத்திற்கு மேலும் 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு !
திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 50 இடங்களை ஒதுக்கீடு செய்து தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு.
நாமக்கல், திருப்பூரை தொடர்ந்து திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது தேசிய மருத்துவ ஆணையம்.
இதன் மூலம் நடப்பாண்டில் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு கூடுதலாக 150 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 50 எம்பிபிஎஸ் (MBBS) இடங்களை தேசிய மருத்துவ ஆணையம் (NMC) ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 5,200 இடங்கள் கிடைக்கின்றன.
வரவிருக்கும் 2026-27 கல்வியாண்டு மாநில கலந்தாய்வில் (counselling) இந்த புதிய இடங்கள் சேர்க்கப்படவுள்ளன.
உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதை அடுத்து இந்த இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவித்துள்ளார்.












